பிரியாணி சாப்பிடும் போட்டி… தம் கட்டி 3 பிரியாணியை லாவகமாக உள்ளே தள்ளிய இளைஞருக்கு ரூ.5ஆயிரம் பரிசு!
இந்த போட்டியில், சென்னை மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. ஆவி பறக்க பறக்க கமகமவென மணம் வீசும் பிரியாணியை போட்டிப்போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இந்த போட்டியில் ஆண், பெண் என இரு பாலரும் கலந்து கொண்ட இந்த போட்டியில், சென்னை மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர்.
ஆவி பறக்கும் சிக்கன் பிரியாணியை இரண்டு நிமிடங்களில் யார் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்ற முதல் சுற்றில் 33 பேர் தேர்வாகியிருந்தனர். இரண்டாவது சுற்றின் போது பிரியாணி சாப்பிட வயிற்றில் இடம் இல்லாமல் இருந்தாலும் போட்டியாளர்கள் விட்டுக்கொடுக்காமல் செம்ம ஒருவருக்கு ஒருவர் செம்ம டஃப் கொடுத்தார்கள்.
இந்நிலையில் இப்போட்டியின் இறுதியில் ஊட்டியைச் சேர்ந்த ராகேஷ் 3 பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை வென்றார். இதையடுத்து இரண்டாம் பரிசு 3 ஆயிரம் ரூபாயை சென்னையைச் சேர்ந்த தனுஷ் என்பவர் தட்டிச்சென்றார்.