பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக என்.ரவி தேர்வு

 

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக என்.ரவி தேர்வு

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

டெல்லி: பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் (பிடிஐ) நிறுவனத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் அடுத்த தலைவர், துணைத் தலைவர், இயக்குனர்கள் குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

அதில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், துணைத் தலைவராக கேஷரி பத்திரிகையின் தலைமை ஆசிரியராக விஜய் குமார் சோப்ரா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் விவேக் கோயங்கா, பிடிஐ-யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது என்.ரவி அவரை அடுத்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.