நெல்லையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இருவர் வெட்டிக்கொலை

 

நெல்லையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இருவர் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இதில் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றொருவரான ஆறுமுகம் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவரும் உயிரிழந்தார். 

Murder

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பி என்பவர் காத ல் திருமணம் செய்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுண் ரயில்வே டிராக்கில் படுகொலை செய்யப்பட்டார்.அதற்கு பழி வாங்கவே இன்று நாங்குநேரி பேருந்து நிலையம் அருகே சுரேஷ், ஆறுமுகம் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.