நெல்லையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் – கொலை செய்யப்பட்ட பெண்… வேறு வழக்கில் உளறிய கொலைகாரர்கள்!

 

நெல்லையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் – கொலை செய்யப்பட்ட பெண்… வேறு வழக்கில் உளறிய கொலைகாரர்கள்!

நெல்லையில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து அவரது உடலை புதைத்த சம்பவம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் லாலுகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் சமீபத்தில் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அந்த பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஆசீர்வாதம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நெல்லையில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து அவரது உடலை புதைத்த சம்பவம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் லாலுகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் சமீபத்தில் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அந்த பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஆசீர்வாதம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு பற்றி பேச்சு சென்றுள்ளது. அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். போலீஸ் ஸ்டைலில் விசாரணை செய்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பான அதிர்ச்சியான தகவலை அவர்கள் தெரிவித்தனர்.

murder

மணிகண்டன், ஆசீர்வாதம் ஆட்டோ ஓட்டுநரான சிவக்குமார் என மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாம். ஆட்டோ ஓட்டும்போது ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவருடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார் சிவக்குமார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்யச் சொல்லி அந்த பெண் தகராறு செய்துள்ளார். இதனால், அந்த பெண்ணை வீட்டைவிட்டு வெளியே வரும்படி கூறி, வேறு ஒரு இடத்தில் குடித்தனம் வைத்துள்ளார். திருமணமான பெண், புது காதலனுடன் ஓடிவிட்டார் என்பதால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் ஏதும் செய்யவில்லை என்று தெரிகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சிவக்குமார், மணிகண்டன், ஆசீர்வாதத்துடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை, தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோயில் அருகே புதைத்துள்ளனர். 

murder

அதன்பிறகு, சிவக்குமார் மும்பை சென்றுவிட்டார். அங்கேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். தற்போது கொலை மிரட்டல் வழக்கில் மணிகண்டன், ஆசீர்வாதம் கைது செய்யப்பட்ட நிலையில் உண்மை வெளிவந்துள்ளது. பெண் புதைக்கப்பட்ட இடத்தை மணிகண்டனும், ஆசீர்வாதமும் அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் அங்கு தோண்டி பெண்ணின் எஞ்சிய சடலத்தை எடுத்துள்ளனர். அதை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மும்பை சென்று சிவக்குமாரையும் கைது செய்துள்ளனர். கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் வெளிவந்ததும், ஏழு ஆண்டுக்குப் பிறகு சடலம் வெளியே எடுக்கப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.