நீதிமன்ற உத்தரவின் படி 130 கடைகளுக்கு சீல் : சென்னை மாநகராட்சி அதிரடி!

 

நீதிமன்ற உத்தரவின் படி 130 கடைகளுக்கு சீல் : சென்னை மாநகராட்சி அதிரடி!

என்.எஸ்.சி போஸ் சாலையில் இயங்கி வந்த 130 கடைகள் மூடாததையடுத்து, அந்தக் கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.

சென்னை : என்.எஸ்.சி போஸ் சாலையில் இயங்கி வந்த 130 கடைகள் மூடாததையடுத்து, அந்தக் கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர்.

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் சில்லறை விற்பனைக்கு அனுமதி பெற்று, மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்தன. இதனால் அங்குள்ள மொத்த விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். 

இது தொடர்பாக கோயம்பேடு மொத்த விற்பனை வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனுமதியில்லாமல் மொத்த விற்பனை செய்துவந்த 130 கடைகளை மூடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கடைகளுக்கு இன்று சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.