நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

 

நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயலால் பெரும் அளவு பாதிக்கப்பட்டிருக்கும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை: கஜா புயலால் பெரும் அளவு பாதிக்கப்பட்டிருக்கும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு 23 கல்லூரிகள் இயங்கி வருகிறது. அந்த கல்லூரிகளில், நாளை(25/11/2018) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளை, ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்லைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேல்குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள் அல்லாது, பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் திட்டமிட்டபடி நாளை தேர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.