திருவாரூரில் வெற்றி பெறுவோம்: டிடிவி தினகரன் நம்பிக்கை

 

திருவாரூரில் வெற்றி பெறுவோம்: டிடிவி தினகரன் நம்பிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பலத்த வியூகங்கள் வகுத்து வருகின்றன. மேலும் அக்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக யார் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஈபிஎஸ் – ஓபிஎஸ் உடன் அமமுக இணைப்பு என்ற எண்ணமே எனக்கு இல்லை. என்னுடைய தற்போதைய எண்ணம் எல்லாம் திருவாரூர் தேர்தல் பற்றி மட்டும்தான் இருக்கிறது. திருவாரூர் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும். திருவாரூர் தேர்தல் முடிவில் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றார்.