திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த கணவர்: காட்டி கொடுத்த டிக் டோக் ஆப்; எப்படி தெரியுமா?
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஊரை விட்டு ஓடியுள்ளார்
விழுப்புரம்: மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஊரை விட்டு ஓடிய கணவர் திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்தது டிக் டோக் செயலி மூலம் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரைக் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஊரை விட்டு ஓடியுள்ளார். இதையடுத்து கணவரைக் காணவில்லை என்று ஜெயப்பிரதா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன சுரேஷ் திருநங்கை ஒருவருடன் டிக் டோக் வீடியோ செய்திருப்பதை ஜெயப்பிரதா அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் விழுப்புரம் திருநங்கை அமைப்பை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதில் சுரேஷ் திருநங்கை ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு ஓசூரில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷை அழைத்து வந்து மனைவி ஜெயபிரதாவுடன் சேர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.