திமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: 5 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

 

திமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: 5 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

கூடுவாஞ்சேரியில் திமுக முன்னாள் கவுன்சிலர் மோகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரியில் திமுக முன்னாள் கவுன்சிலர் மோகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், 2 முறை கூடுவாஞ்சேரி கவுன்சிலராக இருந்துள்ளார்.

கூடுவாஞ்சேரி திமுகவில் செல்வாக்குடன் இருந்த மோகன், நேற்று இரவு நந்தீஸ்வரம் காலனி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த மோகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி போலீசார், மோகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தப் படுகொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியா அல்லது முன்விரோதமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.