தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…
சென்னை தாம்பரம் பகுதி அருகே பள்ளி மாணவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை: சென்னை தாம்பரம் பகுதி அருகே பள்ளி மாணவர் தாறுமாறாக கார் ஓட்டியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு – மப்பேடு சாலையில் விரைவாக வந்த கார் ஒன்று சாலையிலிருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி, முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி தூக்கி வீசிவிட்டு நிற்காமல் சென்றது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களில் பயணித்த கிளாட்சன் (18), விக்ரம் (18), ஆறுமுகம் (40) அவரது மனைவி சாந்தி (35) ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்து, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…#tambaram #accident #bike #CCTVFootage #toptamilnews #ttn pic.twitter.com/PicelgA7Ho
— toptamilnews (@toptamilnews) June 10, 2019
இந்த கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுநர் 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. காருடன் தலைமறைவான அந்த மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.