தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ! மொத்த எண்ணிக்கை 485 ஆனது!!

 

தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ! மொத்த எண்ணிக்கை 485 ஆனது!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11லட்சத்து 34ஆயிரத்தை கடந்துள்ளது. 50ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 411 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

beela rajesh

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “இன்று மேலும் 74 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அறிகுறியுடன்  90541 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என கூறினார்.