சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Nov 18, 2018, 19:08 IST1542548314000
சென்னையின் சில பகுதிகளில் நாளை 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையின் சில பகுதிகளில் நாளை 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (19/11/2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள பகுதிகள்:
- நசரத்பேட்டை
- மேப்பூர்
- வரதராஜபுரம்
- மலையம்பாக்கம்
- அகரமேல்
- செம்பரம்பாக்கம் ஒரு பகுதி
- திருமழிசை ஒரு பகுதி
- பெங்களூர் டிரங்க் ரோடு ஒரு பகுதி
ஆகிய, மேல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை 7 மணி நேரம் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.