‘சூரிய உதயத்தை 40 நிமிடம் தாமதமாக்கியது நான் தான்’ : நித்தியானந்தாவின் சர்ச்சை பேச்சு!
நித்தியானந்தா என்றாலே அவர் சர்ச்சைக்குப் பெயர்போனவர் என்பது பலரும் அறிந்த ஒன்றே.
பெங்களூரு : தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டேன் என்று நித்தியானந்தா கூறியுள்ள வீடியோ என்று வைரலாகி வருகிறது.
நித்தியானந்தா என்றாலே அவர் சர்ச்சைக்குப் பெயர்போனவர் என்பது பலரும் அறிந்த ஒன்றே. இதனால் இவர் தனது சீடர்களுடன் பேசும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் சமீபத்தில் சீடர்கள் மத்தியில் பேசிய நித்தியானந்தாவின் வீடியோ ஒன்றை முன்னாள் பிபிசி செய்தியாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தினமும் சூரிய உதயத்துடன் தான் நாள் ஆரம்பமாகிறது. ஆனால் இன்று சூரிய உதயம் தாமதமாக இருந்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்? என்று கேட்க அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.
This baba ordered sun to rise 40 min late because he was doing meditation and sun ☀️ obeyed! That’s what he claims and see claps by mesmerised bhakts. pic.twitter.com/mUPtQkwTgd
— Rifat Jawaid (@RifatJawaid) July 4, 2019
இதையடுத்து தொடர்ந்து பேசிய நித்தியானந்தா, ‘நீங்கள் கூகுளில் சென்று பாருங்கள். வழக்கத்தை விட இன்று சூரிய உதயம் 40 நிமிடங்கள் தாமதமாக உதயமாகியது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்கக் கூடாது என்று கட்டளை இட்டது தான்’ என்றார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.