சிஆர்பிஎஃப் வீரரை முட்டி போட வைத்து அடித்து மிரட்டிய கஞ்சா வியாபாரி ; வைரல் வீடியோ!
என்எல்சி சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த காப்பர் கம்பிகளைத் திருட முயற்சி செய்துள்ளார்.
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் அருகிலிருந்த இரும்பு தடவாள பொருட்கள் திருடு போனது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்கள் செல்வேந்திரன், பாத்திரதாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த கஞ்சா மணி (எ) மணி, தன் நண்பர்களுடன் என்எல்சி சுரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த காப்பர் கம்பிகளைத் திருட முயற்சி செய்துள்ளார்.
அப்போது ரோந்து பணியிலிருந்த செல்வேந்திரன், மணியைப் பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கையில் வைத்திருந்த கத்தியால் செல்வேந்திரனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இதனிடையே சிஆர்பிஎஃப் வீரர் செல்வேந்திரனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடலூரில் என்எல்சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை முட்டி போட வைத்து மிரட்டியதுடன் கத்தியால் குத்திய கஞ்சா வியாபாரி#Cuddalore #viralvideo #police #Crime #cannabis #ForceSoldier pic.twitter.com/rPX1wvuRCH
— Top Tamil News (@toptamilnews) January 7, 2020
அப்போது தப்பியோட முயன்ற மணியை தாஸ் என்ற சிஆர்பிஎஃப் வீரர், செல்லவிடாமல் தடுத்ததோடு, டூ வீலர் சாவியைப் பிடுங்கிக்கொண்டார். இதனால் டென்சன் ஆன கஞ்சா மணி, தாஸை சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கியதுடன், அவரை முட்டி போட வைத்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அதில் மிரண்டுபோன பாதுகாப்புப்படை வீரர் தாஸ், ’’சாரி… தெரியாமல் செய்துவிட்டேன்’’ என்று கெஞ்ச, அதற்கு கஞ்சா மணியோ, ”என்னது, சாரி கேட்கிறாயா?” என்று சொல்லி அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கடுமையாகத் தாக்கி உள்ளார். கூடவே “என்னையே புடிக்க வர்றியா… கஞ்சா விக்கிற இடத்துல யாருடா இவன்? க்ரைமா நீ… வீடியோவுல சொல்றா. நானே குண்டாஸ்ல இருந்து வெளியில வந்து ஒரு மாசம் ஆகுது. இவன் யாருனே தெரியல. க்ரைம்னு சொல்றான் என்னை என்று ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்க, வீடியோ எடுத்துட்டு இருந்த மற்றொரு சிஆர்பிஎஃப் வீரரையும் தாக்க முயன்றுள்ளார். பின்பு அவர்கள் அங்கிருந்து தப்பித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரிவு எஸ்.ஐ உள்ளிட்ட காவலர்களுடன் அங்கு சென்ற மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள், ` நீ கம்பி திருடினியா… நீ ஏன் இங்க வந்தே?’ என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பதைபதைக்கச் செய்கிறது.