சாமி சத்தியமா எம்.எல்.ஏ. பேனரை நாங்க கிழிக்கலை – கோவிலில் ஊரே சத்தியம் செய்கிறது!

 

சாமி சத்தியமா எம்.எல்.ஏ. பேனரை நாங்க கிழிக்கலை – கோவிலில் ஊரே சத்தியம் செய்கிறது!

கிராமத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வரும் வெள்ளிக்கிழமை காளையார் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ‘பேனரைக் கிழித்தது நாங்கள் இல்லை’ என சத்தியம் செய்ய தயார்

காரைக்குடி தொகுதியின் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமியின் சொந்த ஊர் தேவகோட்டை அருகில் உள்ள கப்பலூர். கப்பலூருக்குப் பக்கத்தில் இருக்கும் விளங்குடி கிராமத்தில் ஒரு சின்ன பிரச்னை. எம்.எல்.ஏ.தான் பிரச்னையை தீர்க்கப் போவார் என்றுப் பார்த்தால், பிரச்னையே எம்.எல்.ஏ.வுக்குத்தான். விளங்குடி கிராம கோயில் கும்பாபிஷேகத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களில், எம்.எல்.ஏ. ராமசாமியின் படம் போட்ட பேனர்கள் மட்டும் 3 இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த யாரோதான் இந்தச் செயலைச் செய்திருக்க வேண்டும் என கட்சிக்காரர்கள் சந்தேகிக்க, கிராம மக்கள் மறுக்க, தொடர் சந்தேகம் நீடித்திருக்கிறது.

Vilangudi Villagers

சரி உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம், கிராமத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வரும் வெள்ளிக்கிழமை காளையார் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ‘பேனரைக் கிழித்தது நாங்கள் இல்லை’ என சத்தியம் செய்ய தயார் என அறிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் செல்வாக்கு மிக்கவர், தேவையில்லாத வம்பு வேணாம் என்பதால் மேற்படி முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.