சபரிமலை விவகாரம்: பெண்கள் சென்றால் விபரீதங்களை சந்திக்க நேரிடும்: நடிகர் சிவகுமார் எச்சரிக்கை!

 

சபரிமலை விவகாரம்: பெண்கள் சென்றால் விபரீதங்களை  சந்திக்க நேரிடும்: நடிகர் சிவகுமார் எச்சரிக்கை!

பெண்கள் ஐயப்பனை வழிபட விரும்பினால் வீட்டிலிருந்தே வணங்கலாம். கோயிலுக்குச் சென்று வணங்க விரும்பினால் பாதுகாப்பு இருக்காது. நிச்சயமாக அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னை: பெண்கள் ஐயப்பனை வழிபட விரும்பினால் வீட்டிலிருந்தே வணங்கலாம். கோயிலுக்குச் சென்று வணங்க விரும்பினால் பாதுகாப்பு இருக்காது. நிச்சயமாக அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னை வடபழனியில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட  நடிகர் சிவகுமார், ‘பண்டைய காலம் முதலே பெண்கள் மீதான தொந்தரவுகள் இருந்து வருகிறது.  #MeToo போன்ற விவகாரத்தில் இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை நடந்தாலும், நடக்காவிட்டாலும் பொதுவெளியில் வெளிப்படுத்துவது அநாகரிகமானது; அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்’ என்று கூறியுள்ளார்.

சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், ‘கடவுளைக் கோயில்களுக்கு சென்றுதான் வணங்க வேண்டும் என்பது இல்லை. பெண்கள் ஐயப்பனை வீட்டிலிருந்தே வணங்கலாம். அப்படி கோயிலுக்கு செல்ல முற்பட்டால் பாதுகாப்பின்மை காரணமாக பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.