காணாமல் போன திருத்தணி முருகன் கோயில் கலசம்: அதிர்ச்சியடைந்த பக்தர்கள்!?
திருத்தணி முருகன் கோவிலில் உள்ள கலசம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் உள்ள கலசம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருத்தணி கோவில். இங்கு மலைப்படிகள் மூலம் பக்தர்கள் நடந்து செல்லும் மாடவீதியின் நுழைவு வாயிலில் ஒரு காளிகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தின் மீது மூன்று கலசங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு கலசம் மாயமானதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோபுரத்திலிருந்த சிலைகள் சில சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இது குறித்து பதிலளித்த கோவில் நிர்வாகம், வேகமாக காற்று வீசும்போது கலசம் கீழே விழுந்ததாகவும், அதை தற்போது எடுத்து வைத்துள்ள நிலையில், சிலைகள் மற்றும் கலசத்தை சீரமைப்பதற்கு அறநிலையத் துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றம் சற்று ஓய்ந்துள்ளது.