எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புதுவை: சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக்குறைவால் காலமானார். புதுவை பாரதி வீதியில் அவர் வசித்து வந்த நிலையில், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டது.
பிரபஞ்சனின் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட உடல் சன்னியாசி தோப்பு பகுதியில் உள்ள மயானத்திற்கு காவலர்கள் அணிவகுப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க, பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரியில் எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு சார்பில் முழு மரியாதை.
எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.#Prapanchan #Puducherry #writerscommunity pic.twitter.com/Vdog4luDak— CMO Puducherry (@CMPuducherry) December 23, 2018
அதன்பின், அவர் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை பெற்றுக் கொண்ட பிரபஞ்சனின் மூத்த மகன் கவுதம், அவரது உடலுக்குத் தீ மூட்டினார்.