எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!

 

எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, அவர்களை  இலங்கை கடற்படையினர்  கைது செய்வதும்,  படகுகளை சேதப்படுத்தி கடுமையாக தாக்கி விரட்டி அடிப்பதும்  தொடர் கதையாகியுள்ளது. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் 9 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 பேரையும் அவர்களது படகுகளுடன் கைது செய்தது.இத தொடர்ந்து  கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

 3 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடலோர காவல் படை, அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக  நாகை அருகே நேற்று முன்தினம் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.