ஆசிரியரை வழிமறித்து அடித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள்: அதிர வைக்கும் காரணம்!

 

ஆசிரியரை வழிமறித்து அடித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள்: அதிர வைக்கும் காரணம்!

பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடியதை  ஆசிரியர் கண்டித்ததால் மாணவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரை வழிமறித்து அடித்த 12ஆம் வகுப்பு மாணவர்கள்: அதிர வைக்கும் காரணம்!

கும்பகோணம் : பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடியதை  ஆசிரியர் கண்டித்ததால் மாணவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் ஸ்ரீநகர் பகுதியில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் சகா மாணவனின் பிறந்த நாளை கொண்டியுள்ளனர். இதை கண்ட உயிரியல் துறை ஆசிரியர் கல்யாணசுந்தரம் மாணவர்களை கண்டித்ததுடன் இதுகுறித்து பள்ளி முதல்வரிடமும் புகார் கூறியுள்ளார். 

இதனால் ஆசிரியர் மீது ஆத்திரமடைந்த  மாணவர்கள், பள்ளி முடிந்து மாலை வீட்டுக்குள் திரும்பும் வழியில் ஆசிரியர் கல்யாண சுந்தரத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஆசிரியரின் முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.