அரியர் தேர்வு எழுத போன 4 மாணவர்கள் ரயில் மோதி பலி!

 

அரியர் தேர்வு எழுத போன 4 மாணவர்கள் ரயில் மோதி பலி!

வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்,  இறந்தவர்கள் கல்லூரி மாணவர்கள்  சித்திக், கருப்பசாமி, கவுதம் என்பது தெரியவந்தது

கோவை ராவுத்தர்பாலம் அருகே ரயிலில் மோதி மனித உடல்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்படச் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு கிடந்த நான்கு உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ttn

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்,  இறந்தவர்கள் கல்லூரி மாணவர்கள்  சித்திக், கருப்பசாமி, கவுதம் என்பது தெரியவந்தது. இவர்கள் கொடைக்கானல், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ttn

அரியர்  தேர்வு எழுதிவந்த இவர்கள்  ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, ரயில் வந்து மோதியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.