அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
Nov 1, 2020, 18:07 IST1604234262000
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் கடந்த 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அமைச்சர் துரைக்கண்ணு மறைந்ததை அறிந்து வருத்தமடைகிறேன். சமுதாயத்திற்கு சேவை செய்வதிலும், விவசாயிகளுக்கு நன்மை செய்திலும் அவரது பணி அளப்பறியது. இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.