அப்பாவி ஆண்களை பாதுகாக்க புதிய சட்டம் வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்… 

 

அப்பாவி ஆண்களை பாதுகாக்க புதிய சட்டம் வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்… 

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வேதனை தெரிவித்துள்ளார். 

அப்பாவி ஆண்களை பாதுகாக்க புதிய சட்டம் வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்… 

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வேதனை தெரிவித்துள்ளார். 

தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவிகள் 34 பேரை, பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை 

பணிநீக்கம் செய்வதற்கு எதிராக சாமுவேல் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் வாதிட்டார். அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் ஆவணங்கள் தாக்கல்
 செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, “கிறிஸ்தவ மிஷனரீகள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது அது கேள்விக்குறியே… 

பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது. 

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும்,  அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையிலும் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது” என்று கூறினார்.