கோவையில் 'ஜிப் லைன்' மற்றும் 'ஜிப் சைக்கிள்'- சோதனை ஓட்டம் வெற்றி

 
ஜீப் லைன்

இந்தியாவில் முதல் முறையாக கோவை உக்கடம் குளத்தில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு சோதனை ஓட்டம் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்றது. 

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குளத்தின் மேற்கு கரையில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு சேவை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிரைவடைந்த நிலையில் இதன் சோதனை ஓட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது. 

ஒரே நேரத்தில் ஜிப் லைனில் மூன்று பேர் தொங்கி செல்லும் வகையிலும், ஜிப் சைக்கிளில் மூன்று பேர் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான பாதுகாப்பு அம்சத்துடன் முடிக்கப்பட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செயது கேட்டறிந்தார். இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிரைவடைந்து பொதுமக்கள் பயனபாட்டிற்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே 200 மீட்டர் தொலைவு மற்றும் தண்ணீர் மேல் செல்லும் முதல் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் ரைடு கோவையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.