யுவராஜின் மேல்முறையீடு -தீர்ப்பு ஒத்திவைப்பு

 
g

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

y

 கடந்த 2015 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டம் ஓமலூரில் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்.   இந்த வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கோகுல் ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்திருந்தார்.

 இந்த மேல் முறையிட்டு மனுக்களின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும்  நிறைவடைந்திருக்கும் நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  

 கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி யுவராஜ், அருண், ரஞ்சித், கிரிதர் உட்பட 10 பேரும் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.   கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் ஐந்து பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோகுல்ராஜ் தாயார் சித்ரா சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.   இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருக்கின்றன .  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.