யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமின்

 
ttf

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image

யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார்.இதுதொடர்பான வீடியோவை  Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணா நகர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . 

இந்நிலையில் செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. தான் பதிவிட்ட வீடியோ காட்சிக்கு மன்னிப்பு கூட கேட்கிறேன் என டி.டி.எஃப்.வாசன் தரப்பு வாதத்தை எடுத்துரைத்த நிலையில் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்று செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.