மின்கம்பி அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டைய்ல் மின்கம்பி அறுந்து விழுந்து வாலிபர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிஸ்மிகான் (23), இவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத மின் கம்பி அறுந்து இவர் மீது விழுந்துள்ளது, இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்த பிஸ்மிகானுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அம்மா பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கூறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகள் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


