மணமகன் திடீர் மரணம் : திருமணமான அன்றே நேர்ந்த சோகம்!

 

மணமகன் திடீர் மரணம் : திருமணமான அன்றே நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் அருகே திருமணமான அன்றே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் தனது குடும்பத்துடன் சமயபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஸ்வரனுக்கும் (27), சாயல்குடியை சேர்ந்த 22 வயதான பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த புதன் கிழமை கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மணமகன் திடீர் மரணம் : திருமணமான அன்றே நேர்ந்த சோகம்!

மண்டபத்தில் இருந்து வெளியேறிய மணமக்கள், மதியம் 3 மணிக்கு மணமகள் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு விக்னேஸ்வரன் உறவினர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென விக்னேஸ்வரன் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே விக்னேஸ்வரனின் உயிர் பிரிந்துள்ளது.

விக்னேஸ்வரனின் உடலுக்கு நேற்று மாலை இறுதி சடங்கு செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. திருமணம் ஆன அன்றே மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.