காதலியின் கண் முன்னே கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!

 

காதலியின் கண் முன்னே கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜா(வயது19). பெயிண்டர் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஐந்தாம் வீட்டை விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

ராஜாவை தேடிவந்தநிலையில், அவரது பைக் அரியாங்குப்பம் கடற்கரையில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

மீனவர்களிடம் விசாரித்தபோது, ஒரு வாலிபர் கடலில் இறங்கியதாக கூறினர். இதன் அடிப்படையில் தேடிவந்தபோது, இரண்டு நாட்களூக்கு பின்னர், சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் ராஜாவின் உடல் ஒதுங்கிக்கிடந்தது. பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர் போலீசார்.

காதலியின் கண் முன்னே கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!

இது கொலையா? தற்கொலையா? என்று விசாரித்தபோது, ராஜா ஒரு பெண்ணை காதலுத்து வந்ததாகவும், சம்பவத்தன்று கடற்கரையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரப்பட்ட ராஜா, கடலில் இறங்கி மூழ்கி தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.