நபார்ட்டி பிஸ்கெட்டில் நெளிந்த புழுக்கள்.. அதிர்ச்சியில் பெற்றோர்!

குழந்தைகள் உண்ணக்கூடிய நபாட்டி தின்பண்டத்தில் காலாவதி தேதி முடிவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும்போதே இப்படி புழுக்கள் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பெட்டிக்கடையில் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய நபாட்டி என்ற தின்பண்டத்தை தனது குழந்தைக்காக வாங்கி சென்று கொடுத்துள்ளார். அந்த தின்பண்டத்தை உண்பதற்காக அவரது குழந்தைகள் தின்பண்டத்தின் மேலே உள்ள கவரை பிரித்து உண்ண முயன்ற குழந்தைகள் அதில் புழுக்கள் உயிருடன் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து பெற்றோரிடம் காண்பித்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளிடமிருந்து நபாட்டி என்ற தின்பண்டத்தை வாங்கி பரிசோதனை செய்யும்பொழுது அதில் புழுக்கள் முண்டி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த தின்பண்டத்தின் காலாவதி காலம் ஆறு மாதங்கள் வரை இருந்துள்ளது. இருப்பினும் அந்த தின்பண்டத்தில் உயிருடன் புழுக்கள் இருப்பதால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற தின்பன்டங்களை முறையாக ஆய்வு செய்து பின்பு கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.