இப்படி கூட மரணம் வருமா ? மது அருந்திய மாணவி திடீர் மரணம்..!

 
1

செங்கல்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவள் தனியாக விடுதியில் வசித்து வந்தவர். இவர் சமீபத்தில், விடுமுறைக்காக அவள் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஊரில் இருந்து திரும்பி வந்த போது, அவளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே மன உளைச்சலை போக்க கவிதா தனது தோழியின் அறையில் இரவு முழுவதும் அதிக அளவில் மது அருந்தியுள்ளார். இந்த அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பின்னர், அவருடையை நண்பர் அவரை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்..

மருத்துவ பரிசோதனையில், கவிதா இறந்து விட்டதாக கூறப்பட்டது. அந்தப் பரிசோதனையின் பின்னர், கவிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.