திருமணமான 25 நாட்களில் கணவனுக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்த மனைவி!

 
ச்

கடலூர் திருமணமாகி 25 நாட்களில் கணவனுக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cool Drinks Sin Goods Like Cigarettes


கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசன் என்பவருக்கு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது. ஆனால் பெண் ஷாலினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து முதல் இரவின் போது கூறியதாகவும், இதனால் கலையரசன் ஷாலினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி விட மீண்டும் அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் எல்லாம் சில நாட்களில் சரியாக விடும் என்று கூறி விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 20ம் தேதி ஷாலினி கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்து விட்டார் என்றும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது கலையரசன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலையரசனின் பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு உள்ளாக கணவனுக்கு கூல்டிரிங்ஸ் -ல் விஷம் கொடுத்த மனைவியின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.