கூட்டணியில் இல்லை என்பதற்காக ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்?தி.மு.க.வை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.க.வை கடுமையாக விளாசினார்.
அவர் பேசும்போது, ‘நீட் தேர்வால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கூட எதிர்க்கட்சி தலைவர் செல்லவில்ைல. தர்மேந்திர பிரதான் செய்த தவறுகள்தான் அவரது பதவியை பறித்துள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கிறேன். டெல்லியில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது. ஆனால் முதல் 3 நாட்கள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கலந்து கொள்ளவில்லை. நேற்று வரை நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் ஏன் திடீரென்று ‘சைலண்ட்’ ஆனார்கள்? எங்களுக்கும், கம்யூனிஸ்டுக்கும் பிரச்சினை உண்டு.
ஆனாலும் பா.ஜனதா அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரே அணியாக இருக்கிறோம். ஆனால் கூட்டணியில் இல்லை என்பதற்காக ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? ராகுலை போலீசார் நடத்திய விதத்துக்கு நாடு முழுவதும் தலைவர்கள் கண்டித்தார்கள். ஆனால் அதற்கும் இந்த இரு கட்சிகளும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. நாங்கள் 6 கட்சிகள் ஒரே மேடையில் இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இனி நேர்மையான ஆட்சி தொடரும்’ என்றார்.

