ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தது ஏன்? அண்ணாமலை பதில்
Mar 20, 2024, 12:40 IST1710918624505
![Annamalai](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/563352f67ef3a3b2015b7eacf995e5ff.jpeg)
களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.