உலக நாடுகள் மோதுவது ஏன்? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சுட்டிக்காட்டும் 2 முக்கிய காரணங்கள்!
Mar 21, 2026, 04:45 IST1774048525000
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தனிமனித சுயநலமும், மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கும் ஆதிக்க மனப்பான்மையுமே போர்களுக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார். ‘
உலகிற்கு இப்போது தேவைப்படுவது சண்டைகளோ அல்லது மோதல்களோ அல்ல என்று தெரிவித்த மோகன் பாகவத், ஒற்றுமையும் நல்லிணக்கமும்தான் உலகிற்கு தேவை என்று வலியுறுத்தினார்.
மக்கள் அனைவரும் தர்மத்தின் வழியில் ஒழுக்கத்துடன் நடந்தால் மட்டுமே உலகில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.

