தமிழகத்தை அடுத்த ஆளப்போவது யார்? கருத்துக்கணிப்புகளில் கடும் போட்டி..!
234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் வரும் மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அன்று பிற்பகலுக்குள் யார் ஆட்சியில் அமர்வார் என்பதற்கான முடிவுகள் தெரிய வரும். இதற்கிடையில் நேற்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாயின.
இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறும் எனவும், டைம்ஸ் நவ், சிஎன்என் கணிப்பில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், இந்தியா டுடே முடிவுகளில் தவெக முன்னிலை வகிக்கும் என்றும், காமாக்யா கணிப்பில் தொங்கு சட்டப் பேரவைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


