20வது தவணை எப்போது? புதிய விவசாயிகள் விண்ணப்பிக்கலாமா..?
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-KISAN) மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நேரடி நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இது மூன்று தவணைகளாக (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை) ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது.
19வது தவணை 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டது. அதில் ரூ.22,000 கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு தவணைக்கும் மூன்று மாத இடைவெளி உள்ளது என்பதால், 20வது தவணை 2025ம் ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
பெறுநர் நிலையை எப்படி சரிபார்ப்பது?
www.pmkisan.gov.in இணையதளத்தை திறக்கவும்
வலது பக்கம் உள்ள ‘Know Your Status’ என்பதை கிளிக் செய்யவும்
பதிவு எண் மற்றும் காப்ப்சாவை உள்ளிடவும்
‘Get Data’ என்பதைக் கிளிக் செய்தவுடன் நிலை தெரியும்
பெறுநர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று எப்படி பார்க்கலாம்?
இணையதளத்தில் உள்ள ‘Beneficiary List’ என்பதைக் கிளிக் செய்யவும்
மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம் போன்ற விவரங்களை உள்ளிடவும்
‘Get Report’ என்பதை கிளிக் செய்தால், முழு பட்டியல் திரையில் வரும்
யார் யாருக்கு தகுதி?
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
பயிரிடக்கூடிய நிலம் இருக்க வேண்டும்
சிறு மற்றும் சீமான் விவசாயிகள் மட்டுமே தகுதியுடையவர்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தகுதியற்றவர்கள்
புதிய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
pmkisan.gov.in இணையதளத்தை திறக்கவும்
‘New Farmer Registration’ என்பதை கிளிக் செய்யவும்
ஆதார் எண், காப்ப்சா மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்
விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அதன் பிரிண்ட்அவுட்டை பாதுகாத்து வைக்கவும்
புகார் அல்லது உதவி எண்:
ஹெல்ப்லைன் எண்கள்: 155261, 011-24300606


