பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

 
school

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 1ம் தேதியும்,  ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.   இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

School Education

இந்து சூழலில் சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டங்களின் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

anbil

ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும்,  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.