2026 எப்படி இருக்கும்? நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் வெளியாகி பரபரப்பு..!

 
1 1

2026 பிறந்தாச்சு...ஜோதிடர்கள் 2026-ம் ஆண்டில் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கணிப்புகள் வைரலாகி வருகின்றன.விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம்.

நாஸ்ட்ராடாமஸ், தனது கணிப்புகள் பல நிகழ்வுகளுடன் ஒத்துப் போனதால், உலகெங்கும் அறியப்பட்டவர். ஒவ்வொரு புத்தாண்டிலும் அடுத்த பன்னிரண்டு மாதங்களில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவது வழக்கம். செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு நாஸ்ட்ராடாமஸ் புகழ் பல மடங்கு உயர்ந்தது. அதை நாஸ்ட்ராடாமஸ் துல்லியமாக கணித்து இருந்தார். அவரது சில கணிப்புகள் நிஜ நிகழ்வுகளுடன் ஒத்துப் போனது பலரை ஆச்சரியப்படுத்தியது. அன்று முதல், ஒவ்வொரு புதிய ஆண்டுக்கும் நாஸ்ட்ராடாமஸ் என்ன கணித்திருக்கிறார் என்பதைப் படிக்கும் வழக்கம் பரவலாகியுள்ளது.


"ஒரு பெரிய மனிதன் பகலில் ஒரு இடியால் வீழ்த்தப்படுவான்." என்றுள்ளார். இது ஒரு முக்கிய நபர் உண்மையில் மின்னலால் தாக்கப்படுவார் என்று அர்த்தமல்ல. 'இடி' என்பது ஒரு கொலையாளியின் துப்பாக்கி குண்டு அல்லது வேறு ஏதேனும் தாக்குதல் வடிவமாக இருக்கலாம். அதாவது துப்பாக்கி குண்டு. 'பெரிய மனிதன்' என்பது தெளிவற்றதாகும்; இது தனது துறையில் பெரும் செல்வாக்கு கொண்ட எந்தவொரு நபராகவும் இருக்கலாம். அரசியல்வாதியாக இருக்கலாம். "டஸ்கனியில் கொள்ளை நோய்." பரவும் என்றுள்ளார். இந்த கணிப்பின் புவியியல் தெளிவானது. ஆசியாவிற்கு வெளியே கோவிட்-19 முதலில் கண்டறியப்பட்ட இடம் டஸ்கனி என்பதால், இந்த பிரதேசம் தொற்றுநோய்களால் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மீண்டும் வைரஸ் தாக்குதல்கள் நடக்கலாம்."டிசினோ இரத்தத்தால் நிரம்பி வழியும்." என்றுள்ளார். டிசினோ என்பது சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பிரதேசம். இது பெரும்பாலும் இத்தாலிய மொழி பேசும் மக்களைக் கொண்டது. சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளைப் போலவே, இதுவும் மிகவும் அழகானது. புகழ்பெற்ற சுவிஸ் நடுநிலைமை காரணமாக போர்களின் அழிவிலிருந்து தப்பித்து வந்துள்ளது. இந்த பகுதி போரால் பாதிக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

முக்கிய நாடுகளுக்கிடையே மோதல் சூழல் :
2026ஆம் ஆண்டில் கடற்படை அல்லது கடல்சார் பகுதியில் ஒரு பெரிய சம்பவம் உலக கவனத்தை ஈர்க்கும் என கூறப்படுகிறது. ஒரு நாட்டின் தவறான அரசியல் அல்லது ராணுவ முடிவு காரணமாக கடல்சார் பதற்றம் திடீரென அதிகரித்து, முக்கிய நாடுகளுக்கிடையே மோதல் சூழல் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றத்தின் உச்சமாக ஒரு பெரிய கப்பல் மூழ்கடிக்கப்படும் சம்பவம் நிகழக்கூடும் என்றும், அது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கடல் வழித்தடங்கள், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆதிக்கம் தொடர்பான விவகாரங்களில் புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாகி, கடல் சக்தியின் முக்கியத்துவம் உலக அரசியலில் மேலும் உயரக்கூடும் என இந்த தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.


கடும் பொருளாதார நெருக்கடி :

2026ஆம் ஆண்டில் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முக்கிய உலக வல்லரசுகள் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நெருக்கடி வேலைவாய்ப்பு இழப்பு, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை அதிகரித்து, சமூக அமைதியின்மையை உருவாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்களின் அதிருப்தி அதிகரிப்பதால் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த பொருளாதார குழப்பம் பல நாடுகளில் அரசியல் தலைமை மாற்றத்திற்கும், அரசியல்வாதிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையலாம் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.


விவசாயப் பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் :

2026ஆம் ஆண்டைச் சுற்றி உலகம் பல அபாயங்களை எதிர்கொள்ளும் என குறிப்பிடப்படுகிறது. அந்த ஆண்டில் ஒரு பெரிய நாடு அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராகும் சூழல் உருவாகலாம் என்றும், இதனால் உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் தாக்கம் மனித விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களிலும் பிரதிபலித்து, செவ்வாய் கிரக ஆய்வுகள் உள்ளிட்ட முயற்சிகள் தடையடையலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றம் தீவிரமடைந்து கடும் வெப்பம் அதிகரிக்கும்; பல பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக சில இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும் இந்த கணிப்புகளில் கூறப்படுகிறது.


செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் :

வருங்காலத்தில் உலகளவில் கோதுமை உள்ளிட்ட தானியங்களின் விலைகள் கணிசமாக உயரலாம். இந்த விலை உயர்வு குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளை கடுமையாக பாதித்து, உணவுப் பாதுகாப்பு சவாலாக மாறும் என கூறப்படுகிறது. விவசாய உற்பத்தி குறைவு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச அரசியல் பதற்றம் போன்ற காரணிகள் இதற்குப் பின்னணியாக இருக்கலாம். இதே நேரத்தில், 2026ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (AI) உலகின் பல துறைகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களுக்கு ஆலோசனை வழங்கும் கருவியாக மட்டுமல்லாமல், நேரடியாக முடிவெடுக்கும் சக்தியாக AI வளர்ச்சி அடையும். சில அரசு நிறுவனங்கள், நிர்வாக அமைப்புகள் மற்றும் சேவை துறைகள் கூட AI அடிப்படையில் செயல்படும் சூழல் உருவாகலாம். இது உலக நிர்வாக முறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.