"சேலத்தில் நடப்பது பாமக பொதுக்குழுவே அல்ல!" - அதிரடியாக அறிவித்தது பாமக தலைமை..!

 
1 1

பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக அமைப்பு விதிகள் 15,16ன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் தலைமையில்தான் நடைபெற வேண்டும் என்றும், சென்னை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் அன்புமணிதான் தலைவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்குத் தலைமையேற்கவும் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், சேலத்தில் சட்டவிரோதமாகச் செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலத்தில் நடைபெறும் கூட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பாமக தலைமை புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.