"நாங்க என்ன பிரின்சிபலா? நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா?" - விஜய்யை விளாசிய திவ்யா சத்யராஜ்..!

 
1 1

சென்னையில்  ’தயாள குணம் அழகானது தமிழர் வாழ்வே கலையானது’ என்னும் தலைப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய சத்யராஜ் மகளும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ்” புது கட்சி தொடங்கியவர்களை போல பேப்பரில் எழுதி கத்தி பேச வேண்டும் என்று அவசியம் நமக்கு இல்லை. நாம் உண்மையை பேசினாலே போதும். நான் உடைந்த சமயங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வரிகள் தான்.

ஆளுங்க கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் திமிராக செயல்படுவதாக என்மீது சமூகவலைதளத்தில் சிலர் அவதூறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், பொறுப்பு வழங்கியதால் எனக்கு திமிர் கிடையாது. ஆனால் நான் தி.மு.க-வின் உறுப்பினர் என்ற திமிர் எனக்கு இருக்கிறது.

 

பா.ஜ.கவுக்கு இரண்டே இரண்டு விஷயம் தான் முக்கியம். ஒன்று இந்து, மற்றொன்று இந்தி. தமிழ்நாட்டிற்கு நீதியும் இல்லை நிதியும் இல்லை என சொல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அதேநேரம் பா.ஜ.கவின் எல்லாவிதமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு, தொழில்துறை, மருத்துவம், கல்வி, பெண் வளர்ச்சி, குழந்தைகள் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேடையில் இருந்து பாட்டு பாடுகிறவர்கள் எல்லாம் தலைவர் கிடையாது. மக்களுக்காக பாடுபடுகிறவர்கள் தான் தலைவர்கள். எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல ஆபீஸ் ரூமில் இருந்து லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது.

திரையில் நடனம் ஆடுபவர் தலைவர் கிடையாது ,தரையில் தளம் காண்பவர் தான் தலைவர். அப்படி எப்போதும் மக்களுக்காக களத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டான்.

ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதார் என்று கேட்கிறாங்க.. ஏன் என்றால் அவருக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தார்கள்.. ஜோதிமணி மேம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க.. சும்மா லாஜிக்கே இல்லாமல், நீங்க பெர்மிசன் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். ஏன் எல்லாத்தையும் எங்க கிட்ட கேட்டா செய்யுறீங்க.. நாங்க என்ன பிரின்ஸ்பல்.. நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா.. எல்லாத்தையும் எங்க பெர்மிசனோடு தான் பண்றீங்களா.. எனவே கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க..காவல்துறை எதுக்கு இருக்காங்க.. நம்மளை பாதுகாக்கிறதற்கு.. ஆனால் காவல்துறை மீது பால் வீசுறுது.. மரத்து மேல ஏறுகிறது.. காவல்துறையை கடித்து வைக்கின்றது.. இதையெல்லாத்தையும் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா வேண்டாமா?
 

"நீ அரசியலுக்கு வந்தால் சேகர்பாபுவை போல இருக்க வேண்டும் என என் அப்பா கூறினார். அதற்கு நான் எப்போதும் ஒரே ஒரு சூரியன்தான். அது போல் ஒரே ஒரு சேகர்பாபுதான் இருக்க முடியும். அவரை போல செயல்பட முடியாது" என்றேன். இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

தி.மு.க-வை அழித்து விடுவோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்று தெரியவில்லை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூன்று தூண்கள் இருக்கும் வரை தி.மு.க-வை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.