இனி வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக் கூடாது - தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி..!

 
1
பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியது தான். தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 சதவீத வாக்குகளை பதிவு செய்யலாம். பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதா என்பதை ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும்.

பிரச்சனை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் சுமூகமாக தேர்தலை நடத்தியதற்கு எனது பாராட்டுகள். குறிப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவிகிதம் குறைவது கவலை அளிக்கிறது. வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இது தெ தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளேன். எனவே, தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

இனி வரும் தேர்தல்களில் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக் கூடாது. வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயர வாய்ப்புள்ளது’ என்றார்.