அண்ணாமலையால் அடித்த மொட்டை - வனத்துறையால் கிடுக்குபிடி - பாஜக நிர்வாகிக்கு வந்த சோதனை!

 
tt

திருச்செந்தூர் அருகே உள்ள முந்திரித்தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி  ஒன்றிய  பாரதிய ஜனதா  கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக  இருந்து வருகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த  மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர்  அண்ணாமலை கோவை  தொகுதியில் நிச்சயம்  வெற்றி பெறுவார்.

அண்ணாமலையை நம்பி பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி- நடுரோட்டில் மொட்டை

அவ்வாறு அப்படி வெற்றி பெறவில்லை என்றால் பரமன்குறிச்சி பஜாரில்  மொட்டை போட்டு ரவுண்டானாவை  சுற்றி வருவேன் என சவால் விட்டார்.  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை  தோல்வி அடைந்ததால்  பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் பரமன்குறிச்சி பஜாரில்  மொட்டையடித்து கொண்டார். 

rr

இந்நிலையில் அண்ணாமலை தோற்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்' என சவால்விட்டு, இறுதியில் மொட்டை அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகியிடம் வனத்துறை சோதனை நடத்தியது. பாஜக நிர்வாகி ஜெயசங்கர் மொட்டையடித்துக்கொண்ட வீடியோவில், அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியில் இருப்பது புலி நகமோ என வனத்துறை சந்தேகித்தனர். விசாரணையில் அது 10 வருடங்களுக்கு முன் திருச்செந்தூர் கோயிலில் தெருவோர வியாபாரிகளிடம் வாங்கிய பொருளென தெரிய வந்திருக்கிறது.