விக்கிரவாண்டி : வாக்கு எண்ணிக்கை தொடக்கம் !
Jul 13, 2024, 07:39 IST1720836586978

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எனப்படும் நிலையில் அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக அன்னியூர் சிவா, பாமக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் இன்று வெளியாகின்றன.