திருச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் - வேட்புமனு தாக்கலில் விஜய் காட்டிய மாஸ்..!
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் .கடந்த 30ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார் .விஜய் திருச்சி மேற்கு ஸ்ரீரங்கம் உள்ளிட்ட எட்டு தொகுதிகளின் தவிக்க வேட்பாளர்களை ஆதரித்து இன்று பரப்புரையிலும் ஈடுபட இருக்கிறார்.
விஜய் திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரச்சார வாகனத்தில் மனு தாக்கல் செய்ய வந்தார் விஜய்.திருச்சி விமான நிலையத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை விஜய் ரோடு ஷோ தொண்டர்கள் வீசி எரித்த கட்சி தொண்டை துண்டுகளை வாங்கி தனது தோளில் அணிந்தபடி விஜய் தொண்டர்களை நோக்கி கையைசைத்தும் வாகனத்தில் நின்றபடி வந்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் செல்லும் இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடாது என்பதால் ரோடு ஷோ போன்றவற்றை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு இருந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான 5 கிலோ மீட்டர் தொலைவு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு இருக்கும் நிலையில் விஜய் ரோடு ஷோ நடத்தியது தேர்தல் விதிகளுக்கு புறம்பாக அமையுமா? என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

