நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

 
s

திருச்சியில் வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாய கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திருச்சிக்கு வருகை தந்தனர். முதலில் பஞ்சப்பூர் பகுதியில் இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து ஜி கார்னர் பகுதிக்கு இடத்தை பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர். அப்பொழுது நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு அவரே காரை ஓட்டி சென்றார்.