சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
![vijay](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/36bb9f58ac6d5777fff693912c7be87d.jpg)
ஆந்திராவில் ஆட்சி அமைக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சுமார் 160 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் முதல்வர் அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார்.
Congratulations to Shri @ncbn garu and @JaiTDP for the decisive victory in the assembly elections to lead #AndhraPradesh
— TVK Vijay (@tvkvijayhq) June 4, 2024
Wishing the people of AP great progress under your visionary leadership.
Vijay,
President,
Tamilaga Vettri Kazhagam
ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விஜய், “ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.உங்கள் தொலைநோக்கு தலைமையின்கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.