வீரமங்கை வேலு நாச்சியாரின் திருவுருவ படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!

 
vijay

இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.