மாணவர் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி கண்டனம்..!
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோபா மாடல் (SofaModel) அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.
மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.
அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் படிப்பு தொடரவும் இந்த ரீல்ஸ் அரசு துணை நிற்க வேண்டும். அவரது ஆராய்ச்சி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
— SS News Digital (@SSNEWSDigital) September 17, 2026
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக மலேசியாவில் காத்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன்; தற்போது வரையும் நிதி வரவில்லை என்றும் அமைச்சராக இருக்கும் வன்னியரசு பவரை… pic.twitter.com/SZ3X7JKxfK

