விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல்!
![Vetri](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b6fbd02971374b6945dcf8792953ad7d.jpeg)
இமாச்சலில் சட்லஜ் நதியில் மூழ்கி உயிரிழந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சட்லெஜ் ஆற்றில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரை சாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இமாச்சலில் கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் மூழ்கி உயிரிழந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.